Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

நவம்பர் 01, 2023 08:29

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பஞ்சாயத்தில் பணிபுரியும் 46 தூய்மை பணியாளர்களர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் இலவச சீருடை வழங்கப்பட்டது. 

டவுன் பஞ்சாயத்து தலைவர் திருமலை தலைமை வகித்தார். செயல் அலுவலர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்